Friday, 14 August 2015

ஜெயலலிதா ஜாதகம் என்ன சொல்கிறது? ஜெயலலிதா ஜாதகப்படி அவர் எதிர்காலம் எப்படி இருக்கும்? அவர் ராசி நிலை எப்படி? புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஜாதகம்!

 ஜெயலலிதா ஜாதகம்

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஜாதகம்
ஜெயலலிதா ஜாதகம்

ஜெயலலிதா ஜாதகப்படி அவர் எதிர்காலம் எப்படி இருக்கும்?
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஜாதகத்தைப் பார்க்கலாம். பெயரி லேயே ஜெயத்தைக் கொண்ட இவர்பிறந்த தேதி, 24. 2. 1948. பிறநத நேரம்  பிற்பகல்  2.34மணி. தமிழ் சர்வசித்து வருடம் மாசி மாதம்12 அயனாம்சம் 23:7:47:(லகரி) ஜென்ம நட்சத்திரம் மகம் 3-ம் பாதம் திதி (சுக்கில) பௌர்ணமி யோகம் சதி கண்டம் கரணம்பவம் அயன முத்த ராயணம் பாவக மாற்றம். குருஜனன கால இருப்பு கேது திசை 2 வருடம் 9 மாதங்கள்(http://www.aanmigakkadal.com). இவருடைய ஜாதகத்தை ஆராயும்போது சட்பலம் ரூபங்களில்செவ்வாய் குரு சுக்கிரன் பூர்ண பலம்பெற்றிருக்கிறது. ஜாதகத்தில் விதி என்ற லக்கினத் தையும் குரு பார்ப்பதும், ராகு செவ்வாயின் வீட்டில் 11ல் இருப்பதும், ஜனன காலத்தில் குரு 5-ம் பார்வை பார்ப்பதும், செவ்வாய் சந்திரன் சேர்க்கை பெற்று அமைந்ததால்,வழக்குகள் பல வந்து  6,11க்குரிய செவ்வாய் (வ) சந்திரன் (2க்குரிய) குரு 7ல் ( கால புருஷனுக்கு 9க்குரியவர் பலமாக இருந்து சட்பல ரீதியாகவும், பூர்ண பலம் 8, 4 பெற்றதோடு அஷ்டவர்க்கம் ரீதியாக அதிக பட்சமாக 7 பரல்கள் பெற்று இருந்ததால், அனைத்து வழக்குகளிலும் ஜாத கருக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முடிந்தது. ஜாதகரின்  ஜாதகப்படி, மிதுனத்தின் அமைப்பு அவரை உணர்ச்சி வசப்படு பவராகவும்,  பிரபலமானவ ராகவும்  விளங்கவைக்கிறது. மேலும் பலம் வாய்ந்ததாக விளங்கும் சந்திர லக்கினமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே. மிதுனத்தைப் பொறுத்தவரை,  7-மிடத்திலுள்ள குரு ஒரு அசுபராகி பாதகமான மகரத்தில் இருப்பது நல்லதல்ல. சந்திர லக்கினத்தி லிருந்து 7-மிடத்தில் சூரியன் அமைந்திருப்பது பெண்களுக்கு நல்லதல்ல. ராசிக்குரிய வீடு சந்திரனுடைய வீடாகி, அதில் சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்து அமைந்து குருபார்வை பெறுவது மட்டுமல்லாமல், லக்கினாதி பதியும்,  இரண்டாம் வீட்டின் அதிபதியுமான புதனுடைய பார்வை பலமும் பெறுகிறது. சூரியனுடைய பார்வை பலமும் பெறுவதால், ஜாதகருக்கு, பெயர், புகழ், எந்தஸ்து அனைத்தும்  அமையப்பெற்றுள்ளது.  இதனால், ஜாதகருடைய சிம்ம ராசி பலம் பெற்று விளங்குகிறது. சந்திரன் ,செவ்வாய் சேர்க்கை சந்திர மங்கள யோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த சேர்க்கை சிம்மராசிக்கு பெரிய பலத்தைக் கொடுக்கிறது.  12ம் வீடான விரயத்தில் சனி அமர்ந்திருப்பது இவருடைய எதிரிகளை துவம்சம் செய்கிறது. சனியுடன் இணைந்திருக்கும் ‘ப்ளூடோ’  கொண்ட எண்ணத்தில் உறுதிகொண்டவராக இவரை  விளங்க வைக்கிறது.

ஜெயலலிதாவின் ஜாதக நிலை என்ன?

மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆளுவார் என்ற ஜோதிட பழமொழி..இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இவருக்கு நன்றாகவே
பொருந்து கிறது.  மகம்  நட்சத்திரம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பில்லை. ஆனால் பொது வாழ்வு,மக்கள் தொண்டு மிக சிறப்பாக அமைந்துவிடுகிறது. இவர்களது  பலவீனம்;  முன்கோபம், பிடிவாதம். அறிவாற்றலை பொறுத்தவறை நிறைய உலக ஞானம் உண்டு.
 மகம் கேதுவின் நட்சத்திரம் என்பதால் வாழ்வில் போராட்டம் நிகழ்த்தி, கசப்பான அனுபவங்களை தந்து, வாழ்க்கை பற்றிய புரிதல்களை தரும் கிரகம் கேது. சிம்மம் ராசி அதிபதி சூரியன்..நெருப்பு போல சுட்டெரிக்கும் கோபத்துக்கு இவரே காரணம். சிம்மம் என்றால் சிங்கம்.. அதனால் யாரும் இவர்களை நெருங்க முடியாது.. துணிச்சலும், தன்னம்பிக்கையும் மிக அதிகம்... சிறை சென்றாலும், முகத்தில் ஒரு கம்பீரம் இருக்கும்.. 'அய்யோ’’ என அலற மாட்டார்கள். இவரது ஜாதகத்தில் குருச்சந்திர யோகம் உண்டு. குரு ஒன்பதாம் பார்வையாக சந்திரனைபார்வையிடுகிறார். ஜாதகத்தில் ஏழாம் பாவகத்தில் குரு தனித்து நின்றதாலும் ராசிக்கு ஏழாம் வீடு சனி வீடு என்பதாலும் குடும்பம் இவருக்கு அமையவில்லை. இவருக்கு சுக்கிரன் உச்சம் என்பதால்தான் சினிமாத்துறையில் புகழ் பெற்று இருந்தார்..முக ராசியால் மக்களை கவர்ந்தார்...ஆடம்பரமாக வாழ்கிறார்...ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஓட்டு கேட்கிறார் என்றால் உச்சம் பெற்ற சுக்கிரனே காரணம் ஆகும்.  வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் உறுதியான பேச்சு. எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய , நடுங்க செய்யும் குரல், இரண்டில் உள்ள சனி தருகிறது..ஆனால் அதுவே இவரது பலவீனத்துக்கும் காரணமாகிறது. சனி சந்திரன் வீட்டில் இருப்பதால் அலட்சியம் மிக அதிகம்.  மனக்குழப்பத்தால் முக்கிய நேரங்களில் பெரிய வாய்ப்புகளை இழந்து விடும் ஆபத்தும் உண்டு. சூரியன்,புதன் இணைந்து நின்று. நிபுணத்துவ யோகம் தருகிறார்கள். எதிலும் ஆய்வு செய்தே இறங்குவார். இவர் என்ன செய்யப்போகிறாரோ என எதிரிகளை தினசரி தூங்க விடாமல் அச்சம் கொள்ள செய்வார். பத்தில் சுக்கிரன். இவரது லக்கினத்துக்கு யோகாதிபதி சுக்கிரன் பத்தில் நின்றதால் உச்சம் பெற்றதால் இவர் ஆட்சி புரியும் காலம் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். கலைத்துறைக்கு முன்னேற்றம், வசதி வாய்ப்புகள் உண்டாகும். எட்டு,ஒன்பதாம் அதிபதி சனி இரண்டில் நின்று. இரண்டுக்கு உடையவன் மூன்றில் நிற்பதால் தான் கோடிக்கணக்கான தன் கட்சித்தொண்டர்களை தைரியமுடன்,  உற்சாகத்துடன் வைத்திருக்க முடிகிறது. மக்கள் இவர் குரல் கேட்டதும் புத்துணர்ச்சி அடைகின்றனர். ஜெயலலிதா மிதுன லக்கினக்காரர். மிதுன லக்கினக்காரர்கள் அனைவருமே அழகிய தோற்றமுடையவர்களாக இருப்பார்கள். உதாரணம், - மறைந்த நடிகர் திரு.ஜெமினி கணேசன் மற்றும் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் போன்றவர்கள். லக்கினாதிபதி புதன் 9ம் வீட்டில் அமர்ந்துள்ளார். அது மிதுன லக்கினக்காரர்களுக்குத் திரிகோண வீடு. பாக்கிய ஸ்தானம் புதனுக்கு முதல்தர நண்பனான் சனியின் வீடு. ஆகவே அங்கே சிறப்பாக அமர்ந்த புதன் அவருக்குச் சிறிய வயதிலேயே பணம் புகழ், செல்வாக்கு அனைத்தையும் பெற்றுத்தந்தார். ஐந்தாம் வீடான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார்.  பத்தாம் வீட்டில் அமர்ந்துள்ளார். அது மிதுன லக்கினக்காரர்களுக்குக் கேந்திர ஸ்தானம். சுக்கிரன் வாழக்கை வசதிகளுக்கு எல்லாம் அதிபதி அவர் உச்சம் பெற்றதால் எல்லா வசதிகளையும் கொடுத்து இருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்த பத்தாம் வீட்டிற்கு அதிபதியான் குரு பகவான் 7ம் வீட்டில் சிறப்பாக அமர்ந்து லக்கினத்தைப் பார்வையில் வைத்திருப்பதோடு, தன்னுடைய 10ம் வீடான தொழில் ஸ்தானத்திற்குரிய பணியைச் சிற்ப்பாகச் செய்து அம்மையாரை முதலமைச்சர் பத்விவரை கொண்டுபோய் உட்காரவைத்தார். ஐந்தாம் வீட்டில் அமர்ந்த ஞானகாரகனான் கேது அம்மையாருக்குப் பன்மொழித் திறமையையும், ஆழ்ந்த் நுண் அறிவையும் கொடுத்தார். பதினொன்றில் அமர்ந்த ராகு அவருக்குப் பெரும் புகழையும், செல்வாக்கையும், ஏராளமான தொண்டர்களையும், விசு வாசிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். சூரியனும், புதனும் சேர்க்கை பெற்று  9ல் அமர்ந்துள்ளதைக் கவனியுங்கள். அரசியலிலும், அரசிலும் அம்மையாருக்கு அரும்பணிகளை ஏற்படுத்திக் கொடுத்தது அவர்களின் சேர்க்கைதான். செவ்வாயும், சந்திரனும் சிம்மத்தில் சேர்ந்து சசி மங்களயோகத்தை ஏற்படுத்தினார்கள். பெண்ணாகப் பிறந்தாலும் பெண்களுக்குள் பிரபலமாகி நாட்டின் மிகப் பிரபல்மான பத்துப் பெண்மணிகளில் ஒருவராக அம்மையாரை முன்னிறுத்தியது அந்த சேர்க்கைதான். குறையில்லாத் ஜாதகமே இருக்காது என்ற நியதிக்கு ஏற்ப அம்மையாரின் ஜாதகத்தில் லக்கினத்தில் மாந்தி அமர்ந்தது குறைதான். அவருடைய அதீத கோப உணர்வும்,  பிடிவாதமும் பிரசித்தமானது அல்லவா அத்ற்குக் காரணம் லக்கினத்தில் அமர்ந்த மாந்திதான். அதுபோல இரண்டாம் வீடான் குடும்ப ஸ்தானத்தில் வந்து அமர்ந்த சனியால் அவருக்குக் குடும்ப வாழவு அமையாமல் போய்விட்டது. தொழில் ஸ்தானமான் மீனத்தில் கலைகளுக்கு அதிபதியான் சுக்கிரன் இருப்பதால்தான் அவர் திரைத் துறையில் நுழைந்து பெரும் புகழையும் பணத்தையும் ஈட்டினார். பதினொன்றில் அமர்ந்த ராகு ராஜயோகத்தைக் கொடுத்தார். அவர் அமர்ந்த இடத்திற்கு நாயகனான செவ்வாயின் திசையில்தான் அவர் முதலமைச்சர் ஆனார்.


முதல்வர் ஜெயலலிதா சசிகலா இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு நிலை குறித்து

ஜோதிட ரீதியாக இவர்கள் இருவரையும் பிரிப்பது கடினம். ஏனென்றால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ராசி சிம்மம். சசிகலாவின் லக்னம் சிம்ம லக்னம். அடுத்ததாக சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். அதாவது புதனுடைய நட்சத்திரம் சசிகலா. ஜெயலலிதாவினுடையது புதனுடைய லக்னம். மிதுன லக்னம். சசிகலா ரேவதி நட்சத்திரம். அதாவது புதனுடைய நட்சத்திரம். இப்படி இவர்கள் இரண்டு பேருடைய ஜாதகம், தசா புக்தி எல்லா வற்றையும் பார்த்தால், ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த அமைப்பாக இருக்கும். ஒருகட்டத்தில் ஜெயலலிதாவிற்கு அஷ்டமத்துச் சனி வந்தபோது, 1997, 1998 காலகட்டத்தில் இவர்கள் இரண்டு பேரும் தற்காலிகமாக பிரிந் தார்கள்.  அஷ்டமச் சனி என்பது என்னவென்றால், அவமானப்படுத்தி வெகு மானத்தைக் கொடுக்கக் கூடியது. பொதுவாகவே அஷ்டமச் சனியினுடைய வேலையே அவமானப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது. யாருக்கு வந்தாலுமே அஷ்டமச் சனி எடுத்த எடுப்பிலேயே அசிங்கப்படுத்தும். ஆனால், இவர்கள் இரண்டு பேர் ஜாதகமும் பிரிக்க முடியாத ஜாதகம். சில ஒற்றுமைகள் மட்டு மல்ல, பல ஒற்றுமைகள் இவர்கள் ஜாதகத்தில் இருக்கிறது. சாதாரணமாகப் பார்த்தால், ஜெயலலிதா என்றால், ஜெயம் என்றால் செவ்வாய், லலிதா என்றால் சுக்ரனுடைய அம்சத்தில் வரும். இதுபோன்று செவ்வாயும் சுக்ரனும் சேர்ந்த பெயரை திருகுமங்கள யோகப் பெயர் என்று சொல்வார்கள். திருகு என்றால் சுக்ரன், மங்களம் என்றால் செவ்வாய். சசிகலா என்றால், சசி என்றாலும் சந்திரன், கலா என்றாலும் சந்திரன். இதுபோன்று இரண்டு சந்திரன் சேர்ந்தால் ஒரு சூரியன் உருவாகிறது. இரண்டு சூரியன் சேர்ந்தால் அது சந்திரனாகும். இதுபோன்று பல ஒற்றுமைகள் இவர்கள் இருவரின் ஜாதகத் திலும் பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதனால் இவர்களின் நட்பு பிரிக்க முடியாத நட்பு என்று சொல்லாம். அஷ்டமச் சனியில் அசிங்கத்தைச் சந்தித் தால் அது நல்ல அறிகுறி என்றும் சொல்லலாம். அதனால், அஷ்டமச் சனியில் சில ஏமாற்றங்கள், இழப்புகள் இருக்க வேண்டும். நிறைய பேர் அஷ்டமச் சனியில் ஆட்சியைப் பிடித்து, ஆட்சியை இழந்தவர்கள் இருக்கிறார்கள். ராஜீவ் காந்தி இறந்தபோது, தி.மு.க. தலைவருக்கு அஷ்டமத்துச் சனி வந்தது. அந்த சமயத்தில் ஆட்சியைப் பிடித்தார். அதுபோன்ற அஷ்டமத்துச் சனியில் எது கிடைத்தாலும் நிற்காது.  இழப்புகளையும் ஏமாற்றங்களையும் தரக்கூடியது தான் இந்த அஷ்டமத்துச் சனி. ஆனால், அடுத்ததாக உயர்வையும் தரக் கூடியது. அதனால், இவர்கள் இருவருடைய நட்பு தொடரக்கூடியது. ஜோதிடப் படி சொல்கிறோம். கிரகங்கள் அடிப்படையில் பார்க்கும் போது, இரண்டு பேருடைய ஜாதகத்திற்கும் நிறைய தொடர்புகளும், இணைப்புகளும், நட்புகளும் இருக்கிறது. ஒருத்தருக்கு எது யோக கிரகமோ அதுவே மற்றொரு வருக்கும் யோக கிரகமாக உள்ளது. இதுபோன்ற நிறைய விஷயங்கள் உண்டு. இவர்கள் உறவு நீடிக்கும் என்பதே நிலையானது.

2 comments:

  1. கிரகங்கள் நமது வினைகளுக்கேற்ப பலன் கொடுக்கின்றன அனுபவத்தில் இதை உணரலாம்

    ReplyDelete