Friday, 28 August 2015

காயத்ரி மந்திரம் - தமிழ்! காயத்திரி மந்திரம் - மந்திரங்கள்


காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்
காயத்ரிமந்திரத்தை இந்தபூமிக்கு அறிமுகப் படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார்.அவர் ஆகாயத்தில் சூட்சுமஒலியாக தியான நிலையி லிருந்து இதைக்கண்டறிந்தார். அவர் பிராமணர் அல்ல.அவர் ஒரு க்ஷத்திரியர்.ஆனால் இன்று மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) சந்தியாவந்தனம் செய்துவரும் பிராமணர்கள் ஜபிப்பது காயத்ரி மந்திரத்தைத் தான்.

ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந: ப்ரசோதயாத்

இதுதான் அந்த காயத்ரி மந்திரம்.இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும்.  இதன் தமிழ்அர்த்தம் என்ன?
‘யார் நம் அறிவாகிய ஒளிச் சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக்கடவுளை நான் வணங்குகிறேன்’என்பதே இதன் அர்த்தம் ஆகும். சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரி மந்திரத்தின் வடிவமாக ஸ்தூலவடிவமாக அமர்ந்திருக்கிறாள்.அவளுக்கு 5திருமுகங்கள்!  லட்சுமி, சரசுவதி, பார்வதி, மகேஸ்வரி,மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல், காத்தல்,அழித்தல், மறைத்தல், அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவு படுத்துகின்றன. காயத்ரிமந்திரத்தை தினமும் ஜபிப்பவர் களின் அனைத்து ஆசைகளும்  உறுதியாக நிறைவேறும். தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இந்த உலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.

காயத்ரிமந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க  நெறியுடனும், உள்ள தூய்மையுடனும் இருக்க வேண்டும்.  காயத்ரிமந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்றபின் தினமும் ஜபிக்கச் சிறந்ததாகும்.
அஷ்ட ஐஸ்வர்யங்களும், அஷ்டமா சித்திகளும் காயத்ரிதேவியை வழிபட்டால் கைகூடும் என்பது பல்லாயிரக்கணக்கானவர்களின் அனுபவம்.

காயத்ரிமந்திரத்தை மனதிற்குள் ஜபிப்பது 1000 பங்கு பலனைத்தரும்.உதடுகள் மட்டும் அசைந்தவாறு ஜபித்தால் 100 பங்கு பலனும் சப்தமில்லாமல் ஜபித்தால் 10 பங்கு பலனும்தரும்.ஒவ்வொரு முறையும் 27 முறையாவது ஜபிப்பது நல்லது. இந்த காயத்ரிமந்திரத்தை ஏதாவது ஒரு அம்மன் சன்னதியில் கிழக்குநோக்கி அமர்ந்தவாறு அல்லது நின்றவாறு ஜபித்தால்  கிடைக்கும் பலன்களைச் சொல்ல இந்த சர்வர் பத்தாது. ஏன் இந்த உலகில் உள்ள மொத்தசர்வர்களும் பத்தாது. யாக சாலையில் அமர்ந்து காயத்ரிமந்திரத்தை ஜபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும். வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக்கூற 27,000 முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக்கூறி அனைத்து செல்வங்களையும் அடையலாம்.  தொடர்ந்து ஒருவன் அல்லது ஒருத்தி காயத்ரி மந்திரத்தை ஜபித்துவந்தால் அவன்/ள் பெரும் செல்வந்தராவது நிச்சயம். வீட்டில் அல்லது கோவிலில் காயத்ரிமந்திரத்தை பயபக்தியோடும் முழுமனதோடும் சொல்பவர்கள் (ஜபிப்பவர்கள்) நிச்சயம் பலன்பெறுவார்கள்

keywords
காயத்ரி மந்திரத்தின்
ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்
சுபிட்சம் அருளும் காயத்ரி
மகிமை மிக்க காயத்ரி மந்திரம்.!
சூரிய காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரங்கள் - குபேரன்
காயத்ரி மந்திரம் கூறுவதால் ஏற்படும்
காயத்ரி மந்திரம் எப்படி
27 நட்சத்திரங்களின் காயத்ரி
மந்திரங்களை எப்படி
காயத்ரி மந்திரம் உச்சரித்தால் ...
மூல காயத்ரி மந்திரம்
முழு காயத்ரி மந்திரம்
சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள்
காரிய சித்தி தரும் காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன?

காயத்ரி மந்திரங்களும் பயன்களும்
பாவங்கள் போக்கும் காயத்ரி


No comments:

Post a Comment