ஜெயலலிதாவின் அரசியல் வரலாறு
எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை விட ஜெயலலிதாவை மக்கள் எம்.ஜி.ஆரின் வாரிசாக ஏற்றுக்கொண்டது ஏன்?
அதிமுகவின் 40வது ஆண்டு தினத்தையொட்டி ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இதய தெய்வம்
1. தமிழக முதல்வரும், அ.தி.மு.க கட்சியின் தலைவரும் மற்றும் புகழ்பெற்ற முன்னால் தமிழ் நடிகையும் ஆவார்.
2. தமிழ் திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
3. எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கினார்.
4. தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள் ஒருவராவார் இவர்.
விருதுகள்
‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” வாங்கிக்கொடுத்தது.
சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது.
‘சூர்யகாந்தி’ படம், இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது.
தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது.
சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ பெற்றார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது.
‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ கிடைத்தது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம், ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ வழங்கியது.
சட்டத்திற்கான ‘கவுரவ டாக்டர் பட்டத்தை’, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது.
காலவரிசை
1948: மைசூர் நகரில், பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தார்.
1961: ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
1964: கன்னட படத்தில் முதல் முறையாக பங்கேற்றார்.
1965: தமிழ் படங்களில் அறிமுகமானார்.
1972: ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.
1980: பிரச்சார செயலாளராக எம்.ஜி. ஆரால் தேர்வு செய்யப்பட்டார்.
1984: மக்களவைக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
1989: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
1991: முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
2002: இரண்டாவது முறையாக மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.
2011: தற்போது தமிழக முதல்வராக பணியாற்றுகிறார்.
தனித்துப் போட்டியிட்டு வரலாற்று சாதனை படைத்த அதிமுக
எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை விட ஜெயலலிதாவை மக்கள் எம்.ஜி.ஆரின் வாரிசாக ஏற்றுக்கொண்டது ஏன்?
எம்.ஜி.ஆரை திருமணம் செய்துகொண்ட ஜானகி அம்மையார் சினிமாவிலிருந்து விலகி, எந்த ஒரு அரசியல் ஆர்வமும் இல்லாமல், நல்ல குடும்பத் தலைவியாக மட்டுமே விளங்கினார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு சிறிது காலம் முதல்வராக இருந்ததை தவிர. ஆனால், ஜெயலலிதாவின் வளர்ச்சி அப்படிப் பட்டதல்ல. 1981-ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்த தீர்மானித்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் . அதை சிறப்பாக நடத்தி முடிக்கும் பொறுப்பை செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர். எம். வீரப்பனிடம் ஒப்படைத்தார். அந்த மாநாட்டில் காவிரி தந்த கலைசெல்வி என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்துவந்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த வகையில் ஜெயாவின் அரசியல் பிரவேஷத்திற்கு வித்திட்டவர் ஆர்.எம்.வி . தான்.பின்னாளில் அது தனக்கே பெரும் ஆப்பாக முடியும் என்று தெரியாமலே! அதன்பிறகு சுமார் ஒன்றரை வருடம் கழித்து அதாவது 1982 ஜூனில் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் ஜெயலலிதா. பிறகு ஜூலையில் தான் கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு கவர்ச்சியான முகம் தேவைப்பட்டது எம்.ஜி.ஆருக்கு. அப்போது அவரின் நினைவிற்கு வந்தவர் ஜெயலலிதா. மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தையே பேசி அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் அந்த திட்டத்திற்கு நன்கொடையாக ரூபாய் 40,000 வழங்கினார். சத்திணவு திட்டத்தின் மீது ஜெ.,க்கு இருந்த அக்கறையை பார்த்த எம்.ஜி.ஆர். அவரை சத்துணவு திட்ட உயர்மட்டக்குழுவிலும் இடம் கொடுத்தார். தொடர்ந்து இவரை கவனித்து வந்த எம்.ஜி.ஆர்., 1983-இல் கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். கொ.ப.செ., யான ஜெயலலிதா இன்னும் தீவிரமாக தமிழகத்தை சுற்றிவந்தார். அப்படி சுற்றிய ஜெயலலிதாவிற்கு செல்லும் இடமெல்லாம் அபார வரவேற்ப்பு கொடுத்து அசத்தினர் தொண்டர்களும், லோக்கல் நிர்வாகிகளும். எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதையை தொண்டர்கள் ஜெ.,க்கு வழங்கினர். அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலமும், பிரச்சாரங்கள் மூலமும் மக்களை வசீகரிக்க ஆரம்பித்தார் ஜெ. எம்.ஜி.ஆரின் உத்தரவிற்கிணங்க ஜெயலலிதாவிற்க்கு அந்த பேச்சுக்களை எழுதித்தந்தவர் வலம்புரி ஜான். ஜெ.,விடம் இருந்த பேச்சுத்திறமையையும், அபாரமான ஆங்கில, ஹிந்தி புலமையையும் கவனித்த எம்.ஜி.ஆர். இவர்தான் டெல்லி அரசியலுக்கு சரியான ஆள் என்று தீர்மானித்து ராஜ்யசாபா உறுப்பினராக்கினார். மேலும், ராஜ்யசபா அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் நியமித்தார். அங்கு இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திராவிடமும் பாராட்டை பெற்றது. ஏற்கனவே ஜெயலலிதாவின் வளர்ச்சியால் பொறுமிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் மேலும் பொறுமலை கிளப்பியது. கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருக்கும்போது ஜெ.,க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். என்ற புகைச்சலும் கிளம்பியது. நேரடியாகவே எம்.ஜி.ஆரை குற்றம் சாட்டினார் வருவாய்துறை அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம். அதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர்., எஸ்.டி.எஸ்.,வசமிருந்த முக்கியத்துறைகளை பறித்துக்கொண்டு உணவுத்துறையை கொடுத்து டம்மியாக்கினார். அவரின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் ஜெ.,தான் என்று நினைத்து கடுப்பான எஸ்.டி.எஸ்., கட்சியையும், ஆட்சியையும் குறை சொன்னார். இதனால் மேலும் கோபமான எம்.ஜி.ஆர்., எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கினார் ( ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர்., என்று குற்றம் சாட்டியதால் கட்சியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்ட எஸ்.டி.எஸ்., பின்னாளில் அதே ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இடம் பிடித்தது வரலாறு). இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெ.,யை பற்றி எம்.ஜி.ஆரிடம் புகார் செய்ய பயந்தார்கள் மற்றவர்கள். ஆனாலும், அவரின் அசுர வளர்ச்சி மற்றவர்களின் கண்ணை உறுத்தவே செய்தது. ஜெ.,யை ஓரங்கட்ட நாள் பார்த்துக்கொண்டு இருந்தனர்.அந்த நாளும் வந்தது. ஆம்...எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றியது. சிறுநீரகக்கோளாறு, பக்கவாதம் என்று அடுத்தடுத்து நோய் தாக்கியது. இப்படி எம்.ஜி.ஆரின் உடல் நிலை சிக்கலான சமயத்தில் அவரை பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஜானகி, நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், பண்ரூட்டி, ஹண்டே போன்ற மிகச்சிலரே அவரின் பக்கத்தில் அனுமதிக்கப்பட்டனர். மறந்தும் கூட ஜெயலலிதாவை அனுமதிக்கவில்லை. இது மூத்த அமைச்சர்களின் சதி என்று கண்டனம் தெரிவித்தார் ஜெ. மேல் சிகிட்சைக்காக அமெரிக்கா அழைத்துசெல்லப்பட்டார் எம்.ஜி.ஆர். அந்த நேரத்தில் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் ராஜீவ்காந்தி. அப்போதே சட்டசபையயும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த முடிவு செய்தனர் ஆர்.எம்.வீயும், நெடுஞ்செழியனும். அதற்கான அனுமதியையும் எம்.ஜி.ஆரிடம் பெற்றனர். அதன்பின் ஜெயலலிதாவை ஓரங்கட்டினர். அவருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. இப்படியே இருந்தால் மீண்டும் சினிமாவில் நடிக்க அனுப்பிவிடுவார்கள் என்று ஜெயலலிதா நினைத்தாரோ என்னவோ உடனே சுதாரித்துக்கொண்டார் .அழையா விருந்தாளியாக, தனியாளாக பிரச்சாரத்திற்கு புறப்பட்டார். இதைத்தான் அதிமுக தொண்டர்களும் எதிர்பார்த்தனர். அவர்களையும் உற்சாகம் தொற்றிக்கொண்டது… . நாடாளுமன்றத்துடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் நோயுடன் போராடிக்கிக்கொண்டு அமெரிக்காவில் இருக்கிறார். ஆகவே , பிரசாரத்துக்கு யார் போவது? எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்பப்போவது யார்? மக்களைத் திரட்டுவது எப்படி? நாம் புறப்படுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தார் ஜெயலலிதா. அதேநேரம், அதிமுக தலைவர்கள் ‘ஜெயலலிதா பிரசாரம் செய்யப்போவதில்லை.’என்று பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தனர். அந்த செய்தியையும் படித்தார். இப்படி செய்தி கொடுத்தது யார் என்று ஓரளவு யூகிக்க முடிந்தது ஜெயாவால்.இதை ஆர்.எம்.வீ.,தான் கொடுத்திருக்க வேண்டுமென தீர்மானித்தார். அவர் அப்படி நினைக்கவும் காரணம் இருந்தது. உண்மையில் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்தபோது பெயருக்குத்தான் நிழல் முதல்வராக நெடுஞ்செழியன் இருந்தார் மற்றபடி, சகலமும் ஆர்.எம். வீரப்பன் வசமே இருந்தன. சகலமும் என்றால் கட்சி நிர்வாகம் தொடங்கி ஆட்சி, தேர்தல், கூட்டணி, வேட்பாளர்கள், நிதி, பிரசாரம் அனைத்துமே அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தன. பிரச்சாரத்துக்கு யாரை, எங்கே அனுப்பலாம் என்பதை ஆர்.எம்.வீதான் முடிவு செய்தார். மொத்தத்தில் முதல்வரே ஆர்.எம்.வீ.,தான். அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவுக்கும் ஆர்.எம்.வீக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. சினிமா காலத்தில் இருந்தே அவர்கள் இருவருக்குமே ஒத்துவராது. அரசியலிலும் அது நீடித்துக் கொண்டிருந்தது.ஏற்கனவே ஒரு முறை பிரசாரத்திற்கு ஆர்.எம்.வீ., போகாததால் கட்சியின் கொ.ப.செ., என்ற முறையில் அவருக்கே நோட்டீஸ் அனுப்பியிருந்தார் ஜெ. அதன்பிறகு ஆர்.எம்.வீ-க்கு ஜெயா மேலிருந்த கடுப்பு இன்னும் அதிகரித்தது. எம்.ஜி.ஆரிடம் தனக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி கட்சிக்குள் ஜெயா அதிகாரம் செலுத்துவதில் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலருக்கும் விருப்பம் இல்லை. பலத்த அதிருப்தியில் இருந்தனர். தங்களுடைய அதிருப்தியை எம்.ஜி.ஆரிடம் நேரடியாகச் சொல்லமுடியவில்லை. தவித்தனர். தகுந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தனர். தற்போது கிடைத்துவிட்டது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஜெயலலிதாவைத் தேர்தல் பிரசாரத்துக்கு அனுப்பக்கூடாது. ஜெயலலிதாவிற்கு. அதற்கு வாய்ப்பே கொடுக்கக்கூடாது. ஓரங்கட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். அதன் எதிரொலியே ஜெயலலிதா பிரசாரம் செய்யமாட்டார் என்கிற அந்தப் பத்திரிகை செய்தியாக வெளிப்பட்டது. தன்னை வலுக்கட்டாயமாக அமுக்கப் பார்க்கிறார்கள் என்றதும் திமிறிக்கொண்டு எழுந்துவிட்டார் ஜெ. 3 டிசம்பர் 1984 அன்று ஆண்டிப்பட்டியில் தொடங்கியது ஜெயலலிதாவின் பிரசாரம். அடுத்தடுத்து நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம் என்று மொத்தம் இருபத்தியோரு நாள்களுக்குப் பிரசாரம் செய்தார். மக்களிடம் நேரடியாக உரையாடினார். எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினார். எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்த திமுகவின் தவறான பிரசாரம் பற்றிப் பேசினார். வாக்காளர்களிடம் கேள்விகேட்டுப் பதில் பெறும் வித்தியாசமான பிரசாரத்தை மேற்கொண்டார். உண்மையிலேயே சூறாவளிச் சுற்றுப்பயணம் அது. எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்யாத குறையை ஒற்றை ஆளாக நின்று ஜெயலலிதா ஈடுகட்டியதாகப் பத்திரிகைகள் எழுதித் தீர்த்தன. அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு அபார வெற்றி.153 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க., விற்கு 132 தொகுதிகள் கிடைத்தது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தது. இந்த தேர்தலில் தான் எம்.ஜி.ஆர். அமெரிக்கா விலிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்- 25 தொகுதிகளிலும், அ.தி.மு.க-12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றிக்கு சில காரணங்கள் இருந்தது. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிட்சையில் இருக்கும்போது அவர் நடப்பாதையும், கைகாட்டுவதையும், சாப்பிடுவதையும் வீடியோ காட்சிகளாக்கி, அதை இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் மூலம் கச்சிதமாக எடிட் செய்யப்பட்டு பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினர் அதிமுக., தலைவர்கள். கூடவே சமீபத்தில் படுகொலையான இந்திரா காந்தியின் இறுதி ஊர்வல காட்சிகளும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டது. ராஜீவ்காந்தியையும் எம்.ஜி.ஆரையும் குறிக்கும் விதமாக தாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, வாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்ற பிரச்சார கோசங்கள் முதன்மை பெற்றன. தன்னைச் சுற்றிப் பலமான எதிர்ப்புவலை பின்னப்படுகிறது என்று தெரிந்ததும் ஆவேசப்பட்டு எழுந்து, பிரசாரம் செய்து, அந்த வலையை அறுத்தெறிந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவாலும், அதிமுக தொண்டர்களாலும் மறக்கமுடியாத பிரசாரம் அது. கொண்டாடி தீர்த்தனர் ஜெ ஆதரவாளர்கள். ஆம் அ.தி.மு.க., வில் அப்போது ஜெயலலிதாவிற்கென்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் என்று ஒரு கோஷ்டி உருவாகியிருந்தது. சிகிட்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு சிகிட்சைக்காக அமெரிக்கா சென்றார்.அந்த நேரத்தில், எம்.ஜி.ஆர், தனது செல்வாக்கு வளருவது கண்டு பொறாமைப்படுகிறார் என்றும், இனி அவர் முதல்வராக இயங்க முடியாதென்றும், அதனால் என்னை முதல்வர் ஆக்குங்கள் என்றும் பிரதமர் ராஜீவிற்கு தன் கைப்படவே ஒரு கடிதம் எழுதி அதை சேலம் கண்ணன் மூலம் ஜெயலலிதா கொடுத்து விட்டதாக மக்கள் குரல் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. இது போதாதா ஜெயின் அரசியல் எதிரிகளுக்கு. எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அந்த விஷயத்தை பக்குவமாக அவரின் காதிற்கு கொண்டுசென்றனர் அவரின் அரசியல் எதிரிகள். இதைக்கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார் எம்.ஜி.ஆர். உடனே, இனி ஜெயலலிதாவிடம் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டார். தொடர்ந்து அவரை கட்சியிலிருந்தும் நீக்குவது என்பது அவரின் திட்டம். அதன்பிறகு ஒரு நாள் ஜெயாவை கட்சிலிருந்து நீக்க முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்,. அப்போது அங்கிருந்த அமைச்சர் ராஜாராம் இப்போது நீக்கினால் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுவிடும். உங்களுக்கு பூர்ண குணமானபின் இந்த முடிவை எடுக்கலாம் என்று அவரின் முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டார். அப்போதைய அமைச்சர் திருநாவுக்கரசரும் ஜெயலலிதாவை நீக்கக்கூடாது என்று பலமாக வாதாடினார். அவரின் ஆலோசனை படியே ஜெ.,யை நீக்கும் முடிவு தற்காலிகமாய் தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே எம்.ஜி.ஆர். மரணமடைந்து விட்டார். அந்த சமயத்தில் இறுதிவரை எம்.ஜி.ஆரின் உடலருகே இருந்த ஜெ எல்லோராலும் கவனிக்கப்பட்டார். . எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வேனில் ஏறியபோது கே.பி. ராமலிங்கத்தால் வ்லுக் கட்டாயமாக இழுத்து கீழே தள்ளப்பட்ட சம்பவமும் அப்போது நடந்தது. அதனால் அனுதாபமும் பெற்றார். எம்.ஜி.ஆரின் மறைவையடுத்து அரசு நிர்வாகத்தை கவனிக்க நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார். நிரந்தர முதல்வராக தானே போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். தானே முதல்வர் பதவிக்கு போட்டியிடப்போவதாக நெடுஞ் செழியன் அறிவித்தாலும், அதை ஆர்.எம்.வீரப்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை முதல் அமைச்சர் ஆக்காப் போவதாக அவர் அறிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த நெடுஞ்செழியன் ஜெயலலிதாவுடன் இணைந்தார். நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, பண்ரூட்டி ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ( சாத்தூரார்), அரங்கநாயகம் போன்ற ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அண்ணா. தி.மு.க.,வின் பொதுச்செயலாளராக ஜெயாவை தேர்ந்தெடுத்தனர். இதை ஜானகி, ஆர்.எம்.வீ., போன்றோர் கடுமையாக எதிர்த்தனர். அந்த நேரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களில் 98 பேர்கள் ஜானகிக்கு ஆதரவாகவும், 29 பேர்கள் ஜெயாவிற்க்கு ஆதரவாகவும் இருந்தனர். ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறிவிடக்கூடாதென்று ஒரு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஜெ ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 29 பேரும் வட மாநிலத்திற்கு அழைத்துசெல்லப்பட்டு ஆம்னிவேனில் ஊர் சுற்றிக் காட்டப்பட்ட கூத்தும் நடந்தது. ஜெ ஆதரவாளர்கள் திருநாவுக்கரசுவும், சாத்தூர் ராமச்சந்திரனும் அந்த வேலையை பார்த்துக்கொண்டனர். பின் ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை கவர்னர் குரான முன் நிறுத்தி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார் ஆர்.எம்.வீ.,.அதன் படியே ஜானகியை ஆட்சியமைக்க அழைத்தார் கவர்னர் குரானா.3 வாரத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறும் கட்டளையிட்டார். 1988 ஜனவரியில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஜானகி. இரு அணிகளில் ஜானகிக்கு ஆதரவு அதிகமிருந்தாலும் ஜெயலலிதா வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் மைனாரிட்டி ஜானகி அரசாகவே அது இருந்தது. 3 வாரத்திற்குள் வேறு மெஜாரிட்டியை நிரூபித்தாக வேண்டுமே. 62 இடங்கள் வைத்துள்ள காங்கிரஸ் ஆதரித்தால் போதும். ஆட்சி பிழைத்துக்கொள்ளும் என்று முடிவு செய்த ஆர்.எம்.வீ., நடிகர் சிவாஜி கணேசன் மூலம் ராஜீவ் காந்திக்கு தூது விட்டார். ஆனால், பிளவு பட்ட அதிமுக., வை ஆதரிக்கப்போவதில்லை என்று கூறி விட்டார் ராஜீவ். இதற்கிடையில் ஜெயலலிதாவும் டெல்லி சென்று ராஜீவிடம் ஆதரவை கோரினார். ஜெயலலிதாவிடமும் அதே பதிலை சொன்னவர். சட்டசபையில் ஜானகியை எதிர்த்து காங்கிரஸ் வாக்களிக்கும் என்றும் அறிவித்தார். வேறுவழியின்றி தி.மு.க.,வின் 20 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் ஆர்.எம்.வீ, ராசாராம், மாதவன் போன்றோர் இறங்கினர். அ.தி.மு.க. வின் எந்த பிரிவையும் ஆதரிக்கப்போவதில்லை என்று தி.மு.க., செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டு விட்டதால் ஆதரவு தரமுடியாது என்று கை விரித்து விட்டார் கலைஞர் ( அப்படி சொன்னது எத்தனை பெரிய தவறென்று இப்போது உணர்ந்திருப்பார் கலைஞர். அவர் மட்டும் அன்று ஜானகிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் 98+20=118 என்ற எம்.எல்.ஏ. க்கள் அடிப்படையில் ஜானகி அரசு காப்பாற்றப்பட்டிருக்கும். தாக்குப்பிடிக்க முடியாமல், ஜெயாவும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பார் ). ஜனவரி 28 அன்று சட்டமன்றம் கூடியதும் ஜானகி-ஜெயா அணிகளுக்கு இடையே பெரும் கலவரம் வெடித்தது. மைக், ஒலிபெருக்கிகள் உடைக்கப் பட்டன. பல எம்.எல்.ஏ. க்களின் மண்டை உடைந்து ரத்தம் ஓடியது. கட்சி மாறி வாக்களித்ததால். கட்சி கட்டுப்பாட்டை மீறிய 33 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன். ஜானகி கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறி விட்டதாகவும் அறிவித்தார். ஆனால், சட்டஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக கூறி ஜானகி ஆட்சி வெறும் 24 நாட்களில் கலைக்கப்பட்டது பரிதாபமான க்ளைமேக்ஸ். அதன் பின் ஒரு வருடம் ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில் அமலில் இருந்தது. இதற்கிடையில் ஜெயலலிதா அணியில் குழப்பம் ஏற்பட்டது. ஜெயா அணியில் செயல்பட்ட நாவலர், திருநாவுக்கரசு, பண்ரூட்டி, அரங்கநாயகம் போன்ற தலைவர்கள்(?) ஜெ.,க்கு எதிராக திரும்பினர். கட்சிக்கு வசூல் செய்யப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஜெயாவிடம் கணக்கு கேட்ட இவர்கள் கட்சியிலிருந்து இல்லை. இல்லை... ஜெ அணியிலிருந்து நீக்கப்பட்டனர். தங்களை நீக்க ஜெ.,க்கு அதிகாரமில்லை என்று கூறிய இவர்கள், நால்வர் அணி என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தனர். அப்போதுதான் தம்பி வா, தலைமை ஏற்க வா என்று அறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட நடமாடும் பல்கலைக்கழகமான நாவலரை உதிர்ந்த மயிர் என்ற உலகப்புகழ் பெற்ற வார்த்தையால் வசை படினார் ஜெ., நால்வர் அணி சிறிது காலத்துக் குள்ளாகவே மீண்டும் ஜெயாவுடன் இணைந்தது. 1989 ஜனவரியில் தேர்தல் அறிவிக்கப் பட்டது. அ.தி.மு.க., இரண்டு பிரிவுகளானதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும், ஜெயலலிதாவிற்க்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது. ஜானகியுடன் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணியும், ஜெயலலிதாவுடன் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி அமைத்தனர். தி.மு.க., பலமான கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் ஜெயித்தால் மூப்பனார் முதல்வர் என்ற கோஷத்துடன் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தல் முடிவில். தி.மு.க., மீண்டும் அதாவது 13 வருட இடைவெளிக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. அதே நேரம் 198 இட்ங்களில் போட்டியிட்ட ஜெ., அணிக்கு 27 இடங்களும், 175 இடங்களில் போட்டியிட்ட ஜானகி அணிக்கு 1 இடமும் கிடைத்தது. (நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் போட்டியிட்ட முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தான் அந்த ஒருவர் ) ஆண்டிப்பட்டி யில் போட்டி யிட்ட ஜானகியம்மாள் 22,647 வாக்குகள் பெற்று தி.மு.க., வேட்பாளர் ஆசையனிடம் தோல்வியை தழுவி மூன்றாம் இடத்திற்கு தள்ளப் பட்டிருந்தார். அதே நேரம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 33,191 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அங்கு ஜெயாவை எதிர்த்து போட்டியிட்ட ஜானகி அணி வேட்பாளர் நடிகை வென்னிற ஆடை நிர்மலா வெறும் 1512 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்திருந்தார். இதில் ஜானகி அணிக்கு மொத்தம் 21,78,071 (9%) வாக்குகளும், ஜெயலலிதா அணிக்கு மொத்தம் 50,54,138 (21%) வாக்குகளும் கிடைத்திருந்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பெற்று ஜானகி, தனது பிரிவை ஜெயலலிதா அணியுடன் இணைத்துவிட்டு அரசியலிலிருந்தே ஒதுங்கினார். அதன் பிறகே ஒருங் கிணைந்த அண்ணா.தி.மு.க., வின் பொது செயலாளராக ஜெயலலிதா ஆனார். இரட்டை இலை சின்னமும் ஜெயாவிற்கு கிடைத்தது. அரசியல் வானில் எம்.ஜி.ஆரின் வாரிசாகவும் பிரகாசித்தார்.
அதிமுகவின் 40வது ஆண்டு தினத்தையொட்டி ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இதய தெய்வம்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே! நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மக்கள் இயக்கமாம் " அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்" தனது 39 வருட வெற்றிப்பயணத்தை நிறைவு செய்து, 17.10.2011-ல் அகவை 40-ல் அடியெடுத்து வைப்பதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நன்னாளில் நமது இயக்கம் கடந்து வந்த வெற்றிப் பாதைகளின் பெருமிதங்களையும், எதிர்கொண்டு இடர் சாய்த்த வரலாற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். அதே நேரத்தில், நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காக வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி உழைத்திட்ட செயல் வீரர்களையும், வீராங்கனைகளையும், இயக்கப் பணிகளின்போது உயிர் நீத்த உத்தமத் தொண்டர்களின் தியாகங்களையும் எண்ணி அவர்களுக்காக கண்ணீர் சிந்தி நன்றி கூறும் நெகிழ்ச்சியான உணர்வையும் பெறுகிறேன். தமிழகத்து மக்களெல்லாம் ஒரு சேர கிளர்ந்தெழுந்து கருணாநிதி என்னும் தீய சக்தியை தூக்கி எறிய கண்டுபிடித்த பேராயுதம்தான் நம்முடைய அ.தி.மு.க. மக்களுக்காக, மக்களே உருவாக்கி, மக்கள் திலகத்தை தலைமை ஏற்கச்செய்து, ஆட்சி அமைக்க உருவாக்கிய மக்கள் புரட்சி இயக்கம் அ.தி.மு.க. எனவேதான், 1972-ல் கழகம் தொடங்கப்பட்ட ஆறே மாதத்தில் 1973-ஆம் ஆண்டில் திண்டுக்கல் மண்ணில் நாடாளுமன்ற இடைத்தேர்தலை சந்தித்து இந்த இயக்கத்தால் வெற்றி பெற முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார். ஓர் இயக்கம் தொடங்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் ஆதிக்க சக்தியை, குடும்ப ஆதிக்கத்தை, கொள்ளைக் கும்பலின் அராஜகத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்த்தது என்றால், அது இந்திய அரசியல் வரலாற்றில் அ.தி.மு.க. என்ற இயக்கம் மட்டும்தான். எத்தனை முறை முயன்றும் கருணாநிதி என்னும் தீய சக்தியால் வெற்றி பெற முடியாத, வீழ்த்த முடியாத இயக்கம் அ.தி.மு.க. என்பதை, 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலும் உலகிற்கு உணர்த்தியது. புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர். தன்னுடைய ஆட்சிக்காலத்தில், சத்துணவுத்திட்டம் என்னும் உலகுக்கே கலங்கரை விளக்கமாய் அமைந்த மாபெரும் மனிதாபிமான திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பாரதியார் , பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, அன்னை தெரசா போன்ற சான்றோர்களின் பெயர்களில் பல்கலைக்கழகங்கள் கண்டவர் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஒரு மொழிக்காக பல்கலைக்கழகம் கண்டவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆம், தஞ்சையிலே அவர் ஏற்படுத்திய தமிழ் பல்கலைக் கழகத்தைத்தான் குறிப்பிடுகிறேன். தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் ஆழமான அன்பும், அசைக்க முடியாத பற்றுறுதியும், எல்லையில்லாத நன்றிப்பெருக்கும் உடையவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எனவேதான், இன்றைய தமிழகத்தில் கல்வி வளர்ச்சி க்கெல்லாம் முன்னோடியாக பல திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தினார். சமூக நீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் அவர். எனவேதான், 31 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று பிற்பட்டோருக்கு இருந்த உரிமையை 50 விழுக்காடாக தனது ஆட்சிக்காலத்தில் உயர்த்திக் காட்டினார். 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற- நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உடல் நலிவுற்று வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் நம்முடைய இயக்கத்தை அபகரிக்கவும், ஆட்சியை கைப்பற்றவும் தீய சக்தி மேற்கொண்ட முயற்சிகளை என்னுடைய தீவிர செயல்களால் முறியடித்தேன். தேர்தல் பிரச்சாரம் வழியாக நான் மேற்கொண்ட சூறாவளி சுற்றுப்பயணம் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகவே வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்து பதவியேற்றார். அது ஒரு கண்கொள்ளாக்காட்சி. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் கழகம் பிளவு பட்ட நேரத்தில், நான் எடுத்த தீவிர முயற்சிகளின் காரணமாக, முடக்கப்பட்டிருந்த கழகத்தின் வெற்றிச் சின்னமாம் " இரட்டை இலை '' சின்னத்தை மீட்டெடுத்தேன். 1989-ல் கழகம் ஒன்றிணைக்கப்பட்டது. மீண்டும் 1991-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பொற்கால ஆட்சி எனது தலைமையில் அமைந்தது. எண்ணற்ற நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினோம். பின்னர் 1996-ல் வந்த தேர்தலில், தீய சக்தியும், தந்திர சூழ்ச்சியாளர்களும், சூதுமதியினரும் மேற்கொண்ட அரசியல் சதுரங்க விளையாட்டு காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழகமோ அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சியை சந்தித்தது. தமிழக மக்கள் விழித்தெழுந்து 2001-ஆம் ஆண்டு கழகத்தின் கைகளில் மீண்டும் ஆட்சியை ஒப்படைத்தனர். உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் அரும்பாடுபட்டு நிர்வாகத்தை சீரமைத்தேன். நிதி நிலையை உயர்த்தினேன். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதலிடம் நோக்கி பீடுநடை போட்டது. சற்றும் எதிர்பாராத விதமாக 2006-ஆம் ஆண்டில் பெரும்பான்மை இல்லாத கட்சியாக இருந்தபோதும் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது. வழக்கம் போல், கருணாநிதியின் குடும்பம் தமிழ்நாட்டை சூறையாட ஆரம்பித்தது. எல்லா பதவிகளும், எல்லா செல்வங்களும் ஒரு குடும்பத்திற்கே என்ற நிலையை மீண்டும் கருணாநிதி உருவாக்கினார். உலக வரலாற்றில் யாரும் கண்டிராத 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் புரிந்த கட்சி திமுக; ஊழல் புரிந்த குடும்பம் கருணாநிதி குடும்பம் என்ற ஒரு அவப்பெயரை தேடிக்கொடுத்தார் கருணாநிதி. ஆளும் கட்சியினரின் அராஜகம், அட்டூழியம், ஊழல், கொள்ளை -இவற்றை எதிர்த்து நான் மேற்கொண்ட அயராத முயற்சியின் காரணமாகவும்; அந்த முயற்சிக்கு என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளும், தமிழக மக்களும் அளித்த ஒத்துழைப்பின் காரணமாகவும், இதோ, நம்முடைய கழகம் ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்ந்திருக்கிறது! உங்கள் அன்புச் சகோதரியாகிய நான், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடனேயே விலையில்லா அரிசி; முதியோருக்கு 1,000/- ரூபாய் ஓய்வூதியம்; தாலிக்குத் தங்கம்; திருமண உதவித் தொகை 25,000/- ரூபாய் மற்றும் 50,000/- ரூபாய்; தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி; மாணவ, மாணவியருக்கு மடிக் கணினி; ஏழைகளுக்கு ஆடு, மாடுகள் ஆகியவற்றை வழங்குகிறோம். மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங் கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளோம். தி.மு.க.-வினராலும், சமூக விரோத சக்திகளாலும் அபகரிக்கப்பட்ட ஏழை, எளியோரின் நிலங்கள் சட்டப்படி மீட்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப் படைக்கும் மகத்தான பணி நாடே வியக்கும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சி தொடர, நாம் அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய இந்தப் பொன்னாளில் உறுதி மேற்கொள்ள வேண்டும். இனி, எந்தக் காலத்திலும் தீய சக்திகள் தமிழ்நாட்டை கொள்ளையடிக்க முடியாத வகையில் மக்கள் பணியாற்றுவோம் என்பதுதான் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழி. இந்தப் பொன்னாளில் ஊரெங்கும் கழகக் கொடிகளை ஏற்றுங்கள்! எல்லோருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழுங்கள்! உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டி வெற்றி மாலையை நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் சிறப்பம்சங்கள்.1. தமிழக முதல்வரும், அ.தி.மு.க கட்சியின் தலைவரும் மற்றும் புகழ்பெற்ற முன்னால் தமிழ் நடிகையும் ஆவார்.
2. தமிழ் திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
3. எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கினார்.
4. தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள் ஒருவராவார் இவர்.
5. ‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூர் என்ற இடத்தில் பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார். ஜெயலலிதா அவர்கள் தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னை சென்றார். சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது. குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது.
ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், அப்படம் அவருக்கு எந்த பாராட்டும் பெற்றுத் தரவில்லை. 1964ல், திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியையும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடமும் பிடித்தார். ஜெயலலிதா அவர்களின் முதல் இந்திய படம், 1964 ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து, அவர் “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவில் தோற்றமளித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. நடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது. திரையுலகின் பிற்பகுதியில் அவர் ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1968ல், அவர் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அரசியலில் சேரும் முன் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை அவரது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980ல் வெளியான “நதியை தேடி வந்த கடல்” இருந்தது. அதே ஆண்டில், அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், ஜெயலலிதா அவர்களை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது. பின்னர், அவர் தீவிரமாக அஇஅதிமுக அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார். அவர் அரசியலில், எம்.ஜி. ஆரின் கட்சி சார்புடையவராக திகழ்ந்தார். இதுவே, ஜெயலலிதா அவர்களை, அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். அவரது மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது – ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும். எனினும், 1988 ஆம் ஆண்டில் அவரது கட்சி, இந்திய அரசியலமைப்பின் 356 கீழ் தள்ளுபடி செய்யப்பட்டது. 1989ல், அதிமுக கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. அவர் மேல் பல குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் இருந்தாலும், அவர் மூன்று முறை (1991, 2001, 2011) மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். அரசாங்க நிதி மற்றும் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தும் மோசடி, குற்றச்சாட்டுகள் மற்றும் பல சர்ச்சைகள் இருந்தாலும், மாநில மக்களின் மீது அவர் கொண்ட பற்றும், செலுத்திய பங்களிப்பும் அவரை மூன்று முறை ஆட்சிக்கு வர செய்தது. அவரது பதவிக்காலத்தில், அவர் மக்களின் நன்மைக்காக தீவிரமாக வேலை செய்தார். மாநில தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களைத் திறக்க முயன்றார். இதுவே, மாநில வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. அதேநேரத்தில், அவர் மாநிலத்தின் வறுமை, வன்முறை, மற்றும் ஊழலை நீக்க மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
விருதுகள்
‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” வாங்கிக்கொடுத்தது.
சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது.
‘சூர்யகாந்தி’ படம், இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது.
தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது.
சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ பெற்றார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது.
‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ கிடைத்தது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம், ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ வழங்கியது.
சட்டத்திற்கான ‘கவுரவ டாக்டர் பட்டத்தை’, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது.
காலவரிசை
1948: மைசூர் நகரில், பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தார்.
1961: ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
1964: கன்னட படத்தில் முதல் முறையாக பங்கேற்றார்.
1965: தமிழ் படங்களில் அறிமுகமானார்.
1972: ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.
1980: பிரச்சார செயலாளராக எம்.ஜி. ஆரால் தேர்வு செய்யப்பட்டார்.
1984: மக்களவைக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
1989: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
1991: முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
2002: இரண்டாவது முறையாக மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.
2011: தற்போது தமிழக முதல்வராக பணியாற்றுகிறார்.
தனித்துப் போட்டியிட்டு வரலாற்று சாதனை படைத்த அதிமுக
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல் திராவிடக் கட்சி என்ற பெருமையை அதிமுக பெற்றுள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை 1967-க்குப் பிறகு திராவிட கட்சிகளின் கைதான் ஓங்கியிருக் கிறது. ஆனாலும், எந்த திராவிடக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு பெரிய வெற்றியை பெற்றதே இல்லை. மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்கு முன்பு 1952-ல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை திமுக புறக்கணித்தது.அதன்பிறகு 1956-ல் திருச்சியில் நடந்த மாநாட்டில்தான், தேர்தலில் போட்டியிடுவதென்று முடிவு செய் யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1957-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக திமுக தனித்து களம் கண்டது. அப்போது சில தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால், 1962-ல் ராஜாஜியின் சுதந்திரா கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக ளுடன் இணைந்து முதல்முறையாக கூட்டணியில் போட்டியிட்டது. எனினும் சொல்லிக் கொள்ளும் வகையில் வெற்றி கிடைக்க வில்லை. 1967-ல் நடந்த மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் சுதந்திரா கட்சி, முஸ்லிம் லீக் மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி சேர்ந்தது. அப்போது 36 மக்களவைத் தொகுதிகளில் அக்கூட்டணி வென்றது. முதல் முறையாக சட்டசபையையும் திமுக கைப்பற்றியது. 1971 மற்றும் 1980 தேர்தல்களிலும் காங்கிரஸுடன் இணைந்து திமுக போட்டியிட்டது.எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு 1977-ல் முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டபோதும், கூட்டணி அமைத்தே களம் கண்டார். காங்கிரஸ் கட்சியுடன் அணி அமைத்து, 20 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் அதிமுக வென்றது.அதன்பிறகு, 1980-ல் ஜனதா கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட அதிமுக 2 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அதிமுகவும் திமுகவும் மாறி மாறி கூட்டணி அமைத்தே மக்களவைத் தேர்தலை சந்தித்து வந்தன.திராவிட கட்சிகளின் தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த மக்களவைத் தேர்தலில் தான் அதிமுக தன் பலத்தை மட்டுமே நம்பி தனித்துப் போட்டி யிட்டது. இதில், 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் வரலாற்றில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்ற திரா விடக் கட்சி என்ற பெருமையை அதிமுக பெற்று சாதனை படைத்துள்ளது. அதுவும், நாடு முழுவதும் வீசிய மோடி அலை யைக் கடந்து அதிமுக வெற்றி பெற்றிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.
No comments:
Post a Comment